Loading...
Language: Tamil
காலை அல்லது மாலையில் சொல்லுங்கள் -
اَللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ ، وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوْءًا، أَوْ أَجُرَّهُ إِلَى مُسْلِمٍ
அல்லாஹும்ம ஆலிமல் கைபி வஷ் ஷஹாததி ஃபாதிரஸ் ஸமாவாதி வல் அர்ழி ரப்ப குல்லி ஷையின் வ மலீகஹூ அஷ்ஹது அன் லா இலாஹ இல்லா அன்த அஊதுபிக மின் ஷர்ரி நஃப்ஸீ வ மின் ஷர்ரிஷ் ஷைத்தானி வ ஷிர்கிஹி வ அன் அக்தரிஃப அலா நஃப்ஸீ ஸூவன் அவ் அஜுர்ரஹூ இலா முஸ்லிம்.
யா அல்லாஹ்! மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிபவனே, வானங்களையும் பூமியையும் படைத்தவனே, எல்லாவற்றின் இறைவனும் அதிபதியுமே, உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி பகர்கிறேன். என் ஆன்மாவின் தீமையிலிருந்தும் ஷைத்தானின் தீமையிலிருந்தும் அவனுடைய ஷிர்க்கிலிருந்தும் என்னிடம் நான் கெட்டதை செய்துகொள்வதிலிருந்தும் அல்லது ஒரு முஸ்லிமிற்கு அதை இழுத்துவருவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். அபூ பக்ர் அஸ்ஸித்தீக் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: 'யா ரசூலல்லாஹ்! காலையிலும் மதியத்திலும் என்ன சொல்ல வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள்.' அவர்கள் கூறினார்கள்: 'அபூ பக்ரே! (மேற்கண்ட துஆ) சொல்'
Reference: ஸஹீஹ் (அல்பானி). திர்மிதி: 3529