Loading...
Language: Tamil
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (1) குல் ஹுவல்லாஹு அஹத். (2) அல்லாஹுஸ் ஸமத். (3) லம் யலித் வலம் யூலத். (4) வலம் யகுல்லஹூ குஃஃfுவன் அஹத்
(1) கூறுவீராக: அவன் அல்லாஹ், ஒருவன், (2) அல்லாஹ் தேவையற்றவன், (3) அவன் பெற்றெடுக்கவில்லை, பெற்றெடுக்கப்படவும் இல்லை, (4) அவனுக்கு நிகரானவன் எவனும் இல்லை. (ஸூரா இக்லாஸ் 112: 1-4) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தன் தோழர்களிடம் கூறினார்கள்: 'இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதி ஓத உங்களால் முடியாதா?' இது அவர்களுக்கு கடினமாக தோன்றியது. அவர்கள் கேட்டார்கள்: யா ரசூலல்லாஹ்! அதை யார் செய்ய முடியும்? பிறகு அவர்கள் கூறினார்கள்: 'குல் ஹுவல்லாஹு அஹத்' என்னும் ஸூரா குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியாகும்.
Reference: ஸஹீஹ் முஸ்லிம்: 811