Loading...
Language: Tamil
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தஹஜ்ஜுத் நமாஸிற்காக இரவில் நிற்கும்போது இவ்வாறு ஓதுவார்கள்:
اَللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ، لَكَ مُلْكُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ، وَوَعْدُكَ الْحَقُّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَقَوْلُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالنَّبِيُّونَ حَقٌّ، وَمُحَمَّدٌ ﷺ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اَللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ، فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ (لَا إِلَهَ غَيْرُكَ)
அல்லாஹும்ம லகல்-ஹம்து. அன்த கய்யிமுஸ்-ஸமாவாதி வல்-அர்தி வ மன் ஃபீஹின்ன. வலகல்-ஹம்து, லக முல்குஸ்-ஸமாவாதி வல்-அர்தி வ மன் ஃபீஹின்ன. வலகல்-ஹம்து, அன்த னூருஸ்-ஸமாவாதி வல்-அர்தி. வலகல்-ஹம்து, அன்தல்-ஹக்கு வ வஃதுகல்-ஹக்கு, வ லிகாஃஉக ஹக்குன், வ கவ்லுக ஹக்குன், வல்-ஜன்னது ஹக்குன் வன்-னாரு ஹக்குன் வன்னபிய்யூன ஹக்குன். வ முஹம்மதுன் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஹக்குன், வஸ்-ஸாஃது ஹக்குன். அல்லாஹும்ம லக அஸ்லம்து வபிக ஆமன்து, வ அலைக தவக்கல்து, வ இலைக அனப்து வ பிக காஸம்து, வ இலைக ஹாகம்து ஃபக்ஃபிர் லீ மா கத்தம்து வமா அக்கர்து வமா அஸ்ரர்து வமா அஃலன்து, அன்தல்-முகத்திமு வ அன்தல் முஃக்கிரு, லா இலாஹ இல்லா அன்த
யா அல்லாஹ்! எல்லா புகழும் உனக்கே உரியது. நீ வானங்களையும் பூமியையும் அவற்றிலுள்ள அனைத்தையும் தாங்குகின்றவன். எல்லா புகழும் உனக்கே; வானங்களும் பூமியும் அவற்றிலுள்ள அனைத்தும் உன்னுடைய சொத்து. எல்லா புகழும் உனக்கே; நீ வானங்களின் மற்றும் பூமியின் ஒளி. எல்லா புகழும் உனக்கே; நீ வானங்களின் மற்றும் பூமியின் மன்னன்; எல்லா புகழும் உனக்கே; நீ உண்மை உன் வாக்குறுதி உண்மை, உன்னை சந்திப்பது உண்மை, உன் வார்த்தை உண்மை சொர்க்கம் உண்மை நரகம் உண்மை எல்லா நபிமார்களும் (அவர்கள் மீது ஸலாம்) உண்மை; முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உண்மை, கியாமத் நாள் உண்மை. யா அல்லாஹ்! என் விருப்பத்தை உனக்கு சரணடைக்கிறேன்; உன்னில் நம்பிக்கை வைக்கிறேன் உன்னை நம்பியிருக்கிறேன். உன்னிடம் தவ்பா செய்கிறேன், உன் உதவியோடு வாதிடுகிறேன், உன்னை நீதிபதியாக ஆக்குகிறேன். என் முந்தைய மற்றும் பிற்கால பாவங்களை மன்னிப்பாயாக; நான் மறைத்ததையும் வெளிப்படுத்தியதையும் மன்னிப்பாயாக. (சிலரை) முன்னிலைப்படுத்தவும் (சிலரை) பிற்படுத்தவும் செய்பவன் நீயே. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
Reference: புகாரி: 1120