Loading...
Language: Tamil
அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: ஒரு மனிதர் மூச்சுத் திணறியவாறு வந்து தொழுவோர் வரிசையில் நுழைந்து இவ்வாறு சொன்னார்:
اَلْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ
அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கதீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹ்.
அல்லாஹ்வுக்கு அதிகமான, நல்லதும் பரக்கத் நிறைந்ததுமான புகழ். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தொழுகை முடித்தபோது கேட்டார்கள்: உங்களில் யார் இந்த வார்த்தைகள் சொன்னார்கள்? மக்கள் மவுனமாக இருந்தனர். அவர்கள் மீண்டும் கேட்டார்கள்: உங்களில் யார் இந்த வார்த்தைகள் சொன்னார்கள்? அவர் தவறு எதுவும் சொல்லவில்லை. பிறகு ஒருவர் கூறினார்: நான் வந்தேன், மூச்சுவிட சிரமப்பட்டேன், அதனால் அவற்றை சொன்னேன். அவர்கள் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: அவற்றை மேலே (அல்லாஹ்விடம்) யார் எடுத்துச் செல்வார்கள் என்று பன்னிரெண்டு வானவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொள்வதை நான் கண்டேன்.
Reference: முஸ்லிம்: 600