Loading...
Language: Tamil
ஒரு நபர் தஷஹ்ஹுத்திற்குப் பின் இவ்வாறு தொழுகிறார் -
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ، بَدِيعُ السَّمَوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّوْمُ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக பி அன்னல் கல் ஹம்த லா இலாஹ இல்லா அன்தல் மன்னானு பதீஊஸ் ஸமாவாதி வல் அர்ழ் யா தல் ஜலாலி வல் இக்ராம் யா ஹய்யு யா கய்யூம்
யா அல்லாஹ்! புகழனைத்தும் உனக்கே என்ற உண்மையால் உன்னிடம் கேட்கிறேன், உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, கொடையாளனே, வானங்களும் பூமியும் படைத்தவனே, மகத்துவமும் கண்ணியமும் உடையவனே, நித்தியமானவனே, யாவற்றையும் காப்பவனே. பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: 'அவர் எதை கொண்டு துஆ செய்தார் தெரியுமா?' அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நன்கு அறிவார்கள். அவர்கள் கூறினார்கள்: என் ஆன்மா யார் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! அவர் அல்லாஹ்வை அவனுடைய மிகப்பெரிய பெயரால் அழைத்தார், அந்த பெயரால் அழைக்கப்படும்போது பதில் கொடுக்கிறான், அந்த பெயரால் கேட்கப்படும்போது கொடுக்கிறான்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). நஸாயீ: 1300