Loading...
Language: Tamil
உபைய் பின் கஃப் (ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்: 'நான் கேட்டேன்: யா ரசூலல்லாஹ்! நான் உங்கள்மீது அதிகமாக ஸலவாத் கூறுகிறேன். என்னுடைய ஸலவாத்தில் எவ்வளவு உங்களுக்காக செய்ய வேண்டும்? நபியவர்கள் கூறினார்கள்: விரும்பியது.' நான் கேட்டேன்: 'கால் பகுதியா?' நபியவர்கள்: 'விரும்பியது. அதிகரித்தால் நலம்.' நான் கேட்டேன்: 'பாதியா?' நபியவர்கள்: 'விரும்பியது. அதிகரித்தால் நலம்.' நான் கேட்டேன்: 'மூன்றில் இரண்டா?' நபியவர்கள்: 'விரும்பியது. அதிகரித்தால் நலம்.' நான் கேட்டேன்: 'என்னுடைய முழு ஸலவாத்தையும் உங்களுக்காக செய்யட்டுமா?' நபியவர்கள் கூறினார்கள்: 'அப்போது உன்னுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படும், உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.' இந்த ஹதீஸ் நபியவர்கள்மீது ஸலவாத் அதிகரிக்க கூறுகிறது. இது சம்பந்தமாக குர்ஆன் மற்றும் ஸுன்னத்தில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஸலவாத்தை மட்டுமே ஓதவேண்டும்.
Reference: ஸஹீஹ் (அல்பானி). திர்மிதீ: 2457