Loading...
Language: Tamil
காலையில் ஒரு முறை சொல்லுங்கள் -
اَللَّهُمَّ إِنِّي قَدْ تَصَدَّقْتُ بِعِرْضِي عَلَى عِبَادِكَ
அல்லாஹும்ம இன்னீ கத் தஸதக்து பி இர்ழீ அலா இபாதிக
யா அல்லாஹ்! உன்னுடைய அடியார்களுக்காக என் கண்ணியத்தை ஸதகாவாக கொடுத்திருக்கிறேன். தாபிஈ அப்துர் ரஹ்மான் இப்னு அஜ்லான் அல்லது ஸஹாபி அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: அபூ தம்தம் போல் இருக்க முடியாதா? ஸஹாபாக்கள் கேட்டனர்: அபூ தம்தம் யார்? அவர்கள் பதிலளித்தார்கள்: உங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒருவர். அவர் ஒவ்வொரு காலையிலும் இந்த வாக்கியம் சொல்வார். மற்றொரு அறிவிப்பில், என்னை ஏசுபவரை நான் கண்ணியப்படுத்துகிறேன் என்று சொன்னார்.
Reference: ஸஹீஹ் மக்துவ் (அல்பானி). அபூ தாவூத்: 4886