Loading surah...
Back to Tamil Quran
78 Ayahs • Meccan
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱلرَّحْمَٰنُ
அளவற்ற அருளாளன்,
عَلَّمَ ٱلْقُرْءَانَ
இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.
خَلَقَ ٱلْإِنسَٰنَ
அவனே மனிதனைப் படைத்தான்.
عَلَّمَهُ ٱلْبَيَانَ
அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.
ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ بِحُسْبَانٍۢ
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.
وَٱلنَّجْمُ وَٱلشَّجَرُ يَسْجُدَانِ
(கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.
وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلْمِيزَانَ
மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.
أَلَّا تَطْغَوْا۟ فِى ٱلْمِيزَانِ
நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.
وَأَقِيمُوا۟ ٱلْوَزْنَ بِٱلْقِسْطِ وَلَا تُخْسِرُوا۟ ٱلْمِيزَانَ
ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.
وَٱلْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ
இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
فِيهَا فَٰكِهَةٌۭ وَٱلنَّخْلُ ذَاتُ ٱلْأَكْمَامِ
அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-
وَٱلْحَبُّ ذُو ٱلْعَصْفِ وَٱلرَّيْحَانُ
தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
خَلَقَ ٱلْإِنسَٰنَ مِن صَلْصَٰلٍۢ كَٱلْفَخَّارِ
சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.
وَخَلَقَ ٱلْجَآنَّ مِن مَّارِجٍۢ مِّن نَّارٍۢ
நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
رَبُّ ٱلْمَشْرِقَيْنِ وَرَبُّ ٱلْمَغْرِبَيْنِ
இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
مَرَجَ ٱلْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ
அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
بَيْنَهُمَا بَرْزَخٌۭ لَّا يَبْغِيَانِ
(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா.
Page 1 of 4 (78 ayahs)