Loading surah...
Back to Tamil Quran
96 Ayahs • Meccan
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ
மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ
அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
خَافِضَةٌۭ رَّافِعَةٌ
அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும்.
إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّۭا
பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.
وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّۭا
இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,
فَكَانَتْ هَبَآءًۭ مُّنۢبَثًّۭا
பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.
وَكُنتُمْ أَزْوَٰجًۭا ثَلَٰثَةًۭ
(அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.
فَأَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)
وَأَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ
(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)
وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ
(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
أُو۟لَٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ
இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ
இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
ثُلَّةٌۭ مِّنَ ٱلْأَوَّلِينَ
முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
وَقَلِيلٌۭ مِّنَ ٱلْءَاخِرِينَ
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -
عَلَىٰ سُرُرٍۢ مَّوْضُونَةٍۢ
(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -
مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَٰبِلِينَ
ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌۭ مُّخَلَّدُونَ
நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.
بِأَكْوَابٍۢ وَأَبَارِيقَ وَكَأْسٍۢ مِّن مَّعِينٍۢ
தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள்.
وَفَٰكِهَةٍۢ مِّمَّا يَتَخَيَّرُونَ
இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -
Page 1 of 5 (96 ayahs)