Loading surah...
Back to Tamil Quran
50 Ayahs • Meccan
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًۭا
தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக
فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًۭا
வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-
وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًۭا
(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًۭا
(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-
فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا
(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
عُذْرًا أَوْ نُذْرًا
(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌۭ
நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ
இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ
மேலும், வானம் பிளக்கப்படும் போது-
وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ
அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ
மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-
لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ
எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
لِيَوْمِ ٱلْفَصْلِ
தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ
மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.
أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ
முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?
ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْءَاخِرِينَ
பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.
كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).
وَيْلٌۭ يَوْمَئِذٍۢ لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍۢ مَّهِينٍۢ
அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?
Page 1 of 3 (50 ayahs)