Loading surah...
Back to Tamil Quran
40 Ayahs • Meccan
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ عَمَّ يَتَسَآءَلُونَ
எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ
மகத்தான அச்செய்தியைப் பற்றி,
ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
كَلَّا سَيَعْلَمُونَ
அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَٰدًۭا
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
وَٱلْجِبَالَ أَوْتَادًۭا
இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
وَخَلَقْنَٰكُمْ أَزْوَٰجًۭا
இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًۭا
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًۭا
அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًۭا
மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًۭا شِدَادًۭا
உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
وَجَعَلْنَا سِرَاجًۭا وَهَّاجًۭا
ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءًۭ ثَجَّاجًۭا
அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
لِّنُخْرِجَ بِهِۦ حَبًّۭا وَنَبَاتًۭا
அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
وَجَنَّٰتٍ أَلْفَافًا
(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَٰتًۭا
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًۭا
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًۭا
இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
Page 1 of 2 (40 ayahs)