Loading surah...
Back to Tamil Quran
42 Ayahs • Meccan
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىٰٓ
அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ
அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ
அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ
(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ
ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
وَهُوَ يَخْشَىٰ
அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌۭ
அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
فِى صُحُفٍۢ مُّكَرَّمَةٍۢ
(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
مَّرْفُوعَةٍۢ مُّطَهَّرَةٍۭ
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
بِأَيْدِى سَفَرَةٍۢ
(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
كِرَامٍۭ بَرَرَةٍۢ
(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
قُتِلَ ٱلْإِنسَٰنُ مَآ أَكْفَرَهُۥ
(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ
எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
Page 1 of 3 (42 ayahs)