Loading surah...
Back to Tamil Quran
29 Ayahs • Meccan
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ
சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ
நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ
மலைகள் பெயர்க்கப்படும் போது-
وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ
சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-
وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ
காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-
وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ
கடல்கள் தீ மூட்டப்படும்போது-
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ
உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
بِأَىِّ ذَنۢبٍۢ قُتِلَتْ
"எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ
பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ
வானம் அகற்றப்படும் போது-
وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ
நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ
சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
عَلِمَتْ نَفْسٌۭ مَّآ أَحْضَرَتْ
ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ
எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ
முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),
وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ
பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,
وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ
மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍۢ كَرِيمٍۢ
நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.
ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍۢ
(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
Page 1 of 2 (29 ayahs)